செவ்வாய், 16 ஜூலை, 2013

சாதீ(தி) ஒழிய இன்றைய ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியவை

                      சாதீ(தி) ஒழிய இன்றைய ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியவை

மதம் மனிதனைப் பண்படுத்த மட்டுமே பயன்பட வேண்டும்.  இறைவன் ஒருவனே. இறைவனை நாம் காண முடியாது. ஆனால் மனசாட்சியைத் தெய்வமாக நினைத்து அதன்வழி பணியாற்றுவது இன்றைய காலகட்டத்தில் அவசியமாகிறது. பணியாற்றும் இடங்களிலோ, பிற இடங்களிலோ மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் நடந்து கொள்வது அவர்கள் ஆற்றும் ஆசிரியப் பணிக்கு இழுக்காகும். மழை வரையறையின்றி எல்லா இடத்திலும்  பெய்து பூமியை வளப்படுத்துகிறது. அதற்குத் தெரியுமா! சாதி!மதம்!இனம் அனைத்தும் மனிதனுக்கு மட்டுமே உரித்தான பொறாமை என்னும் பெருநோயின் விளைவுகளால் தோன்றுபவை. இவை  மாணவரின் உள்ளத்தில் தீராத பிரச்னைகளை உருவாக்கும். ஆசிரியர்களே மாணவர் மத்தியில் தேவையற்ற பேச்சுகளைப் பேசுவது கூடாது. உள்ளம் என்பது தூய்மையான கோயில் போன்றது. அதில்  மனசாட்சியே கடவுள். அதற்கு நாம் செய்யும் மரியாதை நாம் செய்யும் நல்வழிச் செயல்களே. இதனை உணர்ந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
   ஆணும், பெண்ணும் சரிசமம் என்ற உணர்வு தலைமையிடத்தில் இருந்தால் மட்டும் போதாது. சக ஆசிரியர்களிடத்திலும் மலர வேண்டும். அடுத்தவர் குடும்பத்தில் தேவையற்ற தலையீடு, பணத் திருப்தியின்மை, அடுத்தவர் சொத்தின் மீது அவா  போன்றவை ஆசிரியராக இருக்கத் தகுதியுடையவரின் கொள்கையன்று. இக்குணம் அவ்வளவாகச் சுயமாக மாறிவிடாது. காரணம் நமது சமுதாயம் ஆணாதிக்கத் தலைமைச் சமுதாயம். வீட்டில் சகல உரிமையுடன் இயங்கும் ஆணொருவன் பணியாற்றும்  இடத்திலும் அவ்வாறே எதிர்பார்ப்பதன் விளைவு தேவையற்ற  பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள் எழக் காரணமாகின்றன ஆண் தன்னால் முழுமையாக இயங்க முடியும் என நினைப்பின் அதைத் தன்னுடைய வீட்டிலிருந்து ஆரம்பித்துப் பழகலாம் அதை விடுத்துப் பணியாற்றும் இடத“்தில் தேவையற்ற சிந்தனைகளுடன் அவதூறுகளைப் பரப்பிப் பணியாற்றும் இ.டத்திற்கு இழுக்கு தேடித் தரலாகாது. உன்னால் முடியும் என்று உலகை நீ நடத்து எனப் பெண்கள் சமூகத்தினை வரவேற்கப் பழக வேண்டும். பெண்களும் பணியாற்றும் இடத்தில்  தமது உடையலங்காரத்திலும், தலையலங்காரத்திலும் சற்று கவனத்துடன் இருக்கப் பழகுதல் வேண்டும். ஆசிரியரது சிறு நடவடிக்கையும் மாணவனின் கவனத்தைத் திசை திருப்பிடச் செய்யும். ஒரு சிறு ரோஜா வகுப்பறையில் ஆசிரியர் தலையிலிருந்து கீழே விழும் போது மாணவர் கவனம் அதில் திரும்பும். அப்போது மாணவனின் முழுக் கவனமும் அந்த ரோஜாவின் மீது பதிகிறது.

 ‘ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்‘ என்பதேற்கேற்பச்  சமுதாயத்தில் வாழும் ஆசிரியர்கள்  தங்களது  செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய செயல்பாடுகளினால் வளமான ாணவர் சமுதாயம் மலரும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக