திங்கள், 27 ஜனவரி, 2014

புத்தகத்தின் மகிழ்ச்சி உரசல்

                                         புத்தகத்தின் மகிழ்ச்சி உரசல்
மௌனமாய்க் கிடந்த
என்னுள் பிரளயம்
கலந்த உற்சாக அலைகள் ஆரம்பம்!
சலசலத்த தாளின்
சலங்கைஒலி சப்திக்க
நாமகளின்  அமிர்தவர்ஷிணி ஆரம்பம்!
கணக்கியல் புள்ளியலின்
கணக்குக் கோலம்
தலைமுறை வேதனை தொடராதிருக்க
விரித்த விழியினில்
வேதனை படராதிருக்க
விடாப்பிடியான சிலந்தியின்
நூலாட்டம் அறுபட்ட வேதனையின்
விளிம்பில் புரியாத மனிதரிடையே
புரிய வைக்க மறந்தநிலை
உருவாகிய நிலையினிலே
என்னுள் மலர்ந்த
மல்லிகையின் வாசம்
உலகெங்கும் மணக்க
நினைக்கும் பூபாளம்
ஆரம்பம்!

இன்னொரு ராபர்ட் புரூசின்
கதைக்குத் தொடங்கவிருக்கும்
மகாபாரதப்போரின்
முழக்கம் எதிரொலிக்காமல்
சலசலத்த தாளில்
முகம் புதைத்தபடி
வீணையின் இனிய நாதம்
ஆரம்பம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக