செவ்வாய், 18 நவம்பர், 2014

கதை எழுதும் பயிற்சி



ஒரு தடவை சொன்னா புரிஞ்சுக்கணும்
படித்த படிப்பு கடவுள் கொடுத்தது.
அதை கல்யாணம் முடிஞ்சபின்னாடி நிறைய பேருக்கு ஃபாலோ அப் பண்ண முடியறதில்ல.மறந்து போய்டுது.பிள்ளைகள் எல்லாம் பெரிசான பிறகு தனிமை வாட்டுகிற நேரத்துல படிச்ச டிகிரி மட்டும்தான் ஞாபகம் இருக்கும்.தாய்மொழி ஞாபகம் இருக்கும்.அதுக்கா தாய்,தகப்பன் கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க.......இதுக்கா அத்தனை செலவு....... என்னதான் கணவனுக்கு சேவை செய்யுற மனைவிதான் என்றாலும் வீட்டுவரை படித்த படிப்பினை மறக்காமலிருக்க ஏதாவது செய்ய வேண்டாமா? சொன்னவளையும் ஞாபகம் இல்லை......வெறும் வெற்றுப் புகழுக்காக கிறுக்கல்கள் யாருக்காக?......எங்கோ பார்த்தபடி சொன்ன திவ்யாவை வெறித்தாள் அனுஷா. நான் என்ன வச்சிருக்கிறேனோ அந்த வரிசையெல்லாம் வச்சுக்கற கணக்குப் பாக்கற நீ என் படிப்பையும் ஃபாலோ பண்ணனும்ல....அதுல மட்டும் போட்டி கிடையாதா? எட்டு மணிக்கு எருமைமாடுமாதிரி எந்திரிச்சு ஆஃபிஸ் போக வேண்டியது...பல் தேய்க்க பிரஷ் எடுத்து வைக்க ஒரு ஆளு, குளிக்க வெந்நீர் வைக்க ஒரு ஆள்,ஷூ மாட்ட ஒரு ஆளு, ஸ்கூலுக்கு கொண்டு போய் விட ஒரு ஆளு இப்படியே பழக்கப்பட்ட மாதிரி வாழ்நாள் ஃபுல்லா ஓட்ட முடியாது.ஒவ்வொரு காலகட்டத்துலயும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு குறிக்கோள் இருக்கும்னு தெரியும். அதுக்காக என்ன செய்யலாம்னு யோசிச்சதுண்டா? பணம் என்ன பணம்,இன்னைக்கு ஒருத்தர் கைல! நாளைக்கு வேறாருத்தர் கைல!பத்து வருஷம் கஷ்டப்பட்டா போற வழி கரெக்டா இருந்தா பணம் யார் காலடியில் வேணுமானாலும் கிடைக்கும்.உடல் ஆரோக்யமும்,பாசமும் கிடைக்குமா?கொஞ்சம் பொது வாழ்க்கைக்கு என்ன செய்யணும்னு யோசிக்கணும். சின்ன வயசுப்பாடமும் பெரிசானதுக்கப்புறமும் வரணும். அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை இவங்களோட பிறந்த நீ வாழ்க்கையில் யாருக்கு பயன்பட்டிருக்கிறாய்? செக் நோட்டுல் ஒண்ணு எழுதறதுக்கே டுவிஸ்ட் டேன்ஸ் ஆடும் பென்சில். அப்போ எனக்கென்னன்னு தூக்கிப்போட்டுட்டு  என் படிப்பை நான் பார்க்க ஓடியிருந்தா என்ன பண்ணியிருப்ப? இதுக்கா உனக்கு நான் உள்ளங்கை வேர்க்க அரிச்சுவடி பாடம் சொன்னேன்? ஏதோ பக்கத்துல இருக்க! சொல்லிட்டேன். என்னைத் திட்டுறமாதிரி நீ என்ன எனக்கு அட்வைஸ் பண்ணறதுன்னு சொன்னே பல்லு எகிறிடும். முன்னாடி இருக்கற அப்பா தேச்சு விட்டஅணில்பல் நாலும் காணாமல் போயிடும்.  பணம் மட்டும்தான் வாழ்க்கையில்லை.புரிஞ்சுக்க..சொல்லிவிட்டு விடு!விடுவென நடந்து உனக்குப் பிடிச்ச கேரம்போர்டுல கேம் விளையாடலாம் வர்றியா! என போர்டில் அருகே அமர்ந்த திவ்யாவை சிரித்தபடி அவளை நோக்கி ஓடினாள் அனுஷா.
கதையைத் தொடர்ந்து எழுதுக.
கதைக்குப் பொருத்தமான தலைப்பு எழுதுக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக