புதன், 18 பிப்ரவரி, 2015

வாழ்க்கைப்பாடங்கள்

வாழ்க்கைப்பாடங்கள்

இவ்வுலகில் நிரந்தரமானது அனைவருக்கும் பொதுவானது அன்பு. அத்தகைய அன்பு எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது
பெற்றோர் குழந்தைகளிடம் காட்டும் அன்பு
பிறர்மீது மனிதநேயத்துடன் வாழும் அன்பு
என இருவகையாகப் பிரித்துக்காட்டலாம்.
ஏனெனில் இன்றளவில்  நிறைய இன்றைய குழந்தைகளிடம் மாறுபாடான விஷயங்கள் காணப்படுகின்றன.
தன்குழந்தை என்ற அளவில் ஒன்று அல்லது இரண்டு என்ற அளவில் தமது குடும்பத்தை அமைத்துவாழும் பெற்றோர் தாம் உண்ணாது குழந்தைகளுக்காகச் சேமித்து ஏன் பிறரிடம் இலஞ்சம் பெற்று உயரிய படிப்புடன் இருந்தாலும் வெளியுலகில் தமது மரியாதையைக்குறைத்து வாழ்ந்து வருகின்றனர்.ஆனால் அந்தக் குழந்தைகளுக்குப் பெற்றோரின் அன்பு புலனாவதில்லை.கஞ்சி தான் குடித்து பிள்ளைக்கு பிட்சாவும்,பர்கரும்,விலை உயர்ந்த ஆடைகளையும் வாங்கித்தருகின்றனர்.பிள்ளைகளுக்குத் தமது கஷ்டங்களைப் புரியுமாறு சொல்லி தம்முடன் அமர்ந்து பகிர்ந்து உண்ணும் தன்மையைப் பெற்றோர் ஊட்டவேண்டும். இன்றளவில் நிறைய பிள்ளைகள் பெற்றோருக்கு அளிக்காமல் அவர்களின் நகை,உணவு இவற்றையே கருத்தில்கொண்டு சிறுவயதில்இருந்தே பிடுங்கி வைத்து சமயத்தில் பெற்றவர்களையே அடித்துவிடுகின்றனர். பார்ப்பவர் ஏதாவது கேட்டால் ஒன்று, இரண்டு வைத்திருக்கிறோம்.போனால் போகட்டும் எனப் பெற்றோர் விட்டுவிட அது பிற்காலத்தில் பாசமே என்ன என்பது தெரியாமல் தான்தோன்றித்தனமாக வளர்கின்றது. நீ சோறா போட்டு வளர்த்தாய்?எனக் கடைசிகாலத்தில் அவர்களையே கேள்வி கேட்கின்றனர். பெற்றவள் தலையில் பூவைத்தால்கூட மகள்களுக்குப் பொறுப்பதில்லை.நல்ல துணிமணிகளைத்தாய் அணிய மகள் விடுவதில்லை.தகப்பன் பயன்படுத்தும் அன்றாடப்பொருட்களைத் தான் பயன்படுத்தி மகன்கள் அவர்களைத்தூக்கி எறிந்துவிடுகின்றனர்.

வயதான பெற்றோர் அப்போதுகூட தமது முதுமைப்பருவத்தைப்பற்றிக் கவலைப்படாமல் தமது பேரக்குழந்தைகளுக்காகவே வாழ்ந்து பரிதாபமான மரணத்தைத் தழுவுகின்றனர். பேரக்குழந்தைகளும் இன்று தமது தாத்தா,பாட்டியை பணம் காய்ச்சிமரமாகவேதான் பாரக்கின்றனர்.அந்த தாத்தா அது செய்தார், இந்த தாத்தா இது செய்தார் நீ என்ன என்பதுபோலக் கேள்வி எழுப்பி அவர்கள் மனதை நோகடிக்கின்றனர்.பெற்றவர்களே அதைச்சொல்லிக்கொடுத்துவளர்க்கின்றனர்.அடுத்தவர் பார்க்க பெருமையாக அவர் இது கொடுத்தார்,இது கொடுத்தார் என்று சொல்லி முதியோரை மனம் நோகவிடுவது வாழ்க்கை கிடையாது. ஒரு பிள்ளைக்கு அது செய்தாய்,என் பிள்ளைக்கு நீ இது செய்யவில்லை.உனக்கு அவன்தான் பிரியம் என மனதை நோகடிக்கும் பிள்ளைகளே அதிகம்.இது 3 வயதுக்குந்தை முதல் 60வயதுப் பிள்ளைவரை இன்று பெற்றோரைக்கேள்வி கேட்கிறார்.அவர்களது மனநிலையை யாரும் புரிந்துகொள்வதில்லை. வயசாயிடுத்தோல்லியோ,இனி எல்லாமே அப்படித்தான்....... என சிவாஜி பாடும் பாட்டை அசைபோட்டு வாழும் குடும்பங்கள் எத்தனை எத்தனை?ஒரே வீட்டில் சுவிட்ச்,இடம்குறிப்பாக அறிந்து பழக்கப்பட்ட அவர்களால் தமக்காக வேறு புதுவீட்டில் எப்படி வாழமுடியும் என்றுநினைத்துக்கூடப் பார்க்காமல்பிள்ளைக்கொல்லிகள் இன்று இருக்கின்றனர்.வயதானால் கால்தள்ளும்,துணிகூட இடறும் என்றுகூடத் தெரியாமல் மொபைலை ஏன் கீழே போட்டீர்கள்?ஏன் மெயில் பார்க்கத்தெரியலை?நான்தான் பார்த்துப்பழகுங்கன்னு சொன்னேன்ல..என சிறுபிள்ளைத்தனமாகத் தான் வாழும் வாழ்க்கையின் பகட்டைப் பெற்றோரிடம் காட்டக்கூடாது. தமது பெற்றோர் விருப்பப்பட்டால்தவிர அவர்கள்மீது இதைப்போன்ற செயல்களைத் திணிக்கக்கூடாது. ஒருபிள்ளை இங்கே,மறு பிள்ளை வேறெங்கே என வாழும் சமுதாயத்தில் பெற்றோர் அனைவருக்கும் பிள்ளை ஒன்றுதான்.ஆனால்  தள்ளி இருக்கும் பிள்ளைமுகம் காண இன்னொரு பிள்ளையிடம் கூற இயலாமல் அறிவியல்உபகரணங்களைப்பற்றித் தெரியாமல் பயன்படுத்தச்சொல்லி யாராவது வரமாட்டார்களா என ஏங்கித் தவிக்கும் குடும்பங்கள் எத்தனை தெரியுமா?என்ன அறிவியல் வளர்ச்சி வந்து என்ன செய்ய? பி்ள்ளைகளுக்குப் பண்பாடு தெரியவில்லையே? வீட்டிற்குள் இன்னொரு பிள்ளை இருந்தும் அதைப் பயன்படுத்தத்தெரிந்தும் அதைக்கண்டுகொள்வதுகிடையாது.காரணம் பொறாமை,சுயநலம்.தமது வசதிக்காக வாழும் பிள்ளைகள் தம்கையை எதிர்பார்த்தே வாழவேண்டுமே தவிர பெற்றோரின் உழைப்பை உறிஞ்சிவாழக்கூடாதுஇளவயதில் அடுத்தவருடன் ஒப்பீடு செய்து வாழும் பிள்ளை அடுத்தவர்கள் தமது பெற்றோரை எப்படி வைத்திருந்தார் என்பதை யோசிப்பது கிடையாது.எனவே பெற்றோர் சமுதாயம் பிள்ளைகள் வளர்ப்பில் கவனமாக இருக்கவேண்டும்.ஆசிரியர்களுக்குமட்டும் பண்பாட்டினை வளர்ப்பது கடமையாகாது.பெற்றோரும் ஆசிரியருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும். தாம் குடிப்பது கூழாக இருந்தாலும் அதைச் சந்தோஷமாக அருகில் ஊற்றிக்குடிக்கும் மனநிலையைக் குழந்தைக்கு ஊட்டி வளர்க்கவேண்டும்.பண்பாடு என்பது மனதைப் பண்படுத்தி வாழ்வது.புண்படுத்தி வாழ்வது அல்ல.ஒருபானை சோறிருந்தாலும் உட்கார்ந்திருக்கும் அனைவரும் பகிர்ந்துண்டு வாழும் மனநிலையை வளர்க்கவேண்டும்.தமிழ்மொழி இதைத்தான் வாழ்க்கைப்பாடங்களாக அமைத்துக்காட்டியுள்ளன. இப்படி வளர்க்கப்படும் குழந்தைதான் நாளை பிறரிடம் அன்புகாட்டி வளரும் சமுதாயத்தை உருவாக்கிக்காட்டுவான்.நான் தவறு செய்யாமல்தான் வாழ்வேன் எனக் கடைசிவரையில் உறுதியுடன்வாழ்பவன்தான் தமது வாழ்க்கைப்பாதையில் வெற்றியடைகிறான்.  சகோதர,சகோதரிகளும் ஒருவருக்கொருவர் பொறாமைகொண்டு யார் அதிகமாகப் படிப்பது,பணம் ஈட்டுவது என இயங்கிவரும் உலகமாகிவிட்டதை  பெற்றோர்களும்,ஆசிரியர்களும்,உணரவேண்டும்.அலுவலகத்தாள்பேனா,பென்சில்,அடுத்தவர் மின்னஞ்சலைத்திருட்டுத்தனமாகப்பார்ப்பது,அடுத்தவர் பொருளை அனுபவிப்பது,அடுத்தவருடைய சொத்தினை ஆள்வது இவை யாவுமே நாம் கடைப்பிடித்தால் அவை அனைத்தும் நமது குழந்தைகளும் பின்பற்றும்.உலகத்தோடு ஒத்துவாழ் என நேர்மையில்லாத உலகில் வாழ்ந்தால் யாருக்காகச் சொத்து என்பதே மாறிவிடும் என்பதை உணர்ந்து வாழவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக