திங்கள், 6 ஏப்ரல், 2015

ஆண்ட்ராய்ட்செயலி

              இன்றளவில் கற்பித்தலில் அறிவியல் தொழில்நுட்பம் அவசியம் தேவைப்படுகிறது. இவற்றைத் தமிழ்மொழியில் கொண்டுவருவது ஆசிரியர்களுக்கு மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது. காரணம் நேரமின்மை,படைப்பாற்றல் திறனை வெளிக்கொணரும் அளவு பாடப்பொருள் இல்லாமை,பாடப்பொருள் பற்றிய தெளிவான சிந்தனை இல்லாமை,வகுப்பறைக்கற்பித்தலுக்கு உரிய திட்டமிடுதலை முன்கூட்டியே செய்யாதிருத்தல் போன்றவையாகும். ஒரு வகுப்பறைக்கு மாதம் 4 முறை
மாணவரின் படைப்பாற்றல் திறன் வெளிப்படும்அளவிற்கு கேட்டல்,பேசுதல்,படித்தல்,எழுதுதல் திறன்களை ஆசிரியர் வளர்க்கவேண்டும்.எடுத்துக்காட்டாக மாணவர்கள் இன்றைய அளவில் பொழுதுபோக்கிற்காகச் செல்லிடபேசி போன்ற கையடக்கக்கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.அவற்றில் இடம்பெறும் ஆண்ட்ராய்ட்செயலி எவ்வாறு உருவாக்குகின்றனர்,அதைப்போல நாமும் செய்ய என்ன செய்யலாம் என்பது போன்ற விழிப்புணர்வு ஆசிரியர்களிடையே அமைதல்வேண்டும்.கையடக்கக்கருவிகளில் அமைந்துள்ள விளையாட்டுகள்தான் மாணவர்களைக் கவர்கின்றன.அதை ஆசிரியரே தகுந்த மென்பொருள்வழி உருவாக்கி மாணவரை ஊக்குவிக்கலாம்.மகிழ்ச்சி நிறைந்த வகுப்பறையை உருவாக்கிக்காட்டலாம்.பயிற்சித்தாள் வெறும் எழுத்துகள் நிறைந்திருப்பது மட்டுமல்லாமல் படங்களுடனும்,சிந்திக்கத்தக்க சொற்களுடனும் அமைதல்வேண்டும்.அதைப்போல கையடக்கக்கருவிகளில் அமைந்துள்ள விளையாட்டுகளைத் தகுந்த தமிழ்ப்பாடங்களுடன் இணைத்து
கற்பிக்கலாம்.(appsgeyser.com) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக