சனி, 20 ஜூன், 2015

திருவள்ளுவர் வரலாறு

                                வள்ளுவர்-வாழ்க்கை வரலாறு
பொதுவாக வள்ளுவர் குறித்த பல வரலாறு சொல்லப்படுவதுண்டு.
இவர் பாண்டிய மன்னர் தலையானங்கானத்து நெடுஞ்செழியனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர்.
இறையனாரின் மாணாக்கரான உலகநாதப் பேராசானிடம் வள்ளுவரும்,பாண்டியமன்னரான உக்கிரப் பெருவழுதியும் ஒன்றாகக் கல்வி பயின்றவர்.(12 வருடம்)
பின்னர் மயிலையை அடைந்து வீரனாக விரும்பி மறக்கலை ஆசான் உத்தண்டி தேவரிடம் போர்க்கலை பயின்றார்.
நண்பரான உக்கிரப்பெருவழுதி அமைச்சன் நாகநாதன் சூழ்ச்சியினால் வள்ளுவரைப் பாண்டியநாட்டிற்கு அழைத்தார்.இதனால் நாட்டிற்குப் பல அரிய பல தொண்டுளை ஆற்றிய வள்ளுவர் அகநானூறு என்ற நூலினை அரங்கேற்ற வைத்தார். ரோமாபுரி சென்று கடல்வாணிபம் செழிக்க உடன்பாடு கண்டார்.அங்கே உலகமாவீரன் என்ற பட்டத்தினையும் பெற்று,கிடைத்த பரிஜசை பாண்டியநாட்டிற்கு அளித்தார்.மார்க்கசகாயன் என்ற குறுநிலமன்னரின் மகள் வாசுகியை மணந்தார்.நட்பின் பெருமை அறியா உக்கிரப்பெருவழுதியின் மனைவி எழிலரசி தொல்லை கொடுத்தார்.அமைச்சர் பணியிலிருந்தும் விலகி மயிலை சென்று நெசவுத்தொழிலில் ஈடுபட்டார்.நாகநாதன் சூழ்ச்சியினால் மனைவி வாசுகியை இழந்தார்.ஈழத்துப்பெருவணிகன் ஏலேலசிங்கன் மாணவனாகி வேண்டிக்கொண்டதன் பொருட்டு திருக்குறளை முறைப்படுத்தினார்.
நன்றி
வி.ஆனந்தகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக